என் பெயர் வீ. திலகவதி. என் விருப்பதிற்கு மாறாக தமிழ் படித்தேன். ஆனால் அந்ததமிழ் தான் என்னை புகழின் உச்சிக்குக்கொன்டு சென்றது.

நான் யார் என்பதை இந்த உலகிற்குக்காட்டிவருகிறது.அதற்கு முதலில் என் தந்தைக்கு நன்றி. என் இசை அறிவை வளர்த்த என் தாய்க்கு நன்றி.

எனக்கு எல்லாவகையிலும் உறுதுணையாக இருக்கும் என் கணவர், என் மகன், மருமகள், என் பள்ளி, என்னுடன் பணிஆற்றும் ஆசிரியர்கள், என் மாணவச்செல்வங்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

எத்தனையோ விருதுகள் வாங்கி இருந்தாலும் தங்கத்தமிழ் விருது சிறப்பான ஒன்று. இந்த விருதை வாங்குவதில் இனம்புரியாத மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.காரணம் பெண்ணாகி மனைவியாகி தாயாகி பாட்டியான பின் வாங்கும் விருதுஅல்லவா எனவே ஒரு தனிச்சிறப்பு.

விருது பெற வயது ஒரு தடை இல்லை என நினைக்க வைத்த விருது இது என்பதில் ஐயமில்லை.

நன்றி

Video Link

Click to Watch Here
Share: